உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து யாழில் பாதுகாப்பு அதிகரிப்பு

நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பிறகு யாழ்ப்பாணத்தின் தெருக்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாயில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் நிறுத்தத் தவறியதால், மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் குழு மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார், மற்றொருவர் காயமடைந்தார்.

இவர்கள் ‘ஆவா குழுவின் ’ அங்கத்தவர்கள் என சந்தேகிப்பதாகவும், அவர்களிடம் வாள்கள் இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க