உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மொட்டு அணியில் ஐவர் ஜனாதிபதி தேர்தல் களத்தில்

கூட்டு எதிரணியில் ஜனாதிபதி வேட்பாளர்களாக 5 பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த 5 பேரில் இருந்து ஒருவரை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்வார்.

ஒகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி எமது ஜனாதிபதி வேட்பாளரை நாங்கள் அறிவிக்கவுள்ளோம்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அனைவரினதும் இணக்கப்பாடுகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கல்வித் தகைமைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரின் கல்வி பெறுபேறுகளை முடிந்தால் வெளிப்படுத்துமாறும் எமது வேட்பாளரின் கல்வி தகைமைகளை வெளிப்படுத்த நாம் தயாராக உள்ளோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா மேலும் தெரிவித்துள்ளார் .

கருத்து தெரிவிக்க