உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

இலட்சக்கணக்கில் கொள்ளையடித்தோர் கைது

நுவரெலியா பகுதியில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நுவரெலியா பகுதியில் கடந்த 16 ஆம் திகதி வீட்டொன்றை உடைத்து, சொத்துக்களை  கொள்ளையிட்டுள்ளதாக காவல்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய  விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

குறித்த வீட்டிலிருந்து 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும் 55 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றும் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 21, 24 வயதுடைய சந்தேக நபர்களை நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க