உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

சம்பூரில் 61 வெடிக்க வைக்கும் பொருட்கள் மீட்பு

திருகோணமலை சம்பூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கூனித்தீவு பகுதியில் உள்ள கடற்கரைய அண்டிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 61
டெட்டனேட்டர் மீட்கப்பட்டுள்ளது.

சம்பூர் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை (20) இரவு 11.௦௦ மணியளவில் சோதனை மேற்கொண்டிருந்த போதே இவ்வெடி பொருட்கள் மீட்கப்பட்டது.

இதுவரையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதோடு குறித்த வெடி பொருட்கள் எதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்து சம்பூர்
காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க