உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

திருகோணமலையில் விபத்து :4 மாணவர்கள் படுகாயம்

திருகோணமலை மூதூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட இராழ்குழி பகுதியில் படி வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த 4 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களில் மூவர் திருகோணமலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மூதூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று காலை இடம்பெற்ற இவ்விபத்தில் இராழ்குழி கஜமுகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும்13 வயதுடைய மாணவர்களே
படுகாயமடைந்துள்ளனர்.

இம் மாணவர்கள் மூதூர் மத்திய கல்லூரியில் இடம்பெறவிருந்த சமூக விஞ்ஞான போட்டியில் பங்குபற்றுவதற்காக முச்சக்கர வண்டியில் சென்றபோதே இவ்
அனர்த்தம் இடபெற்றுள்ளது.

படி வாகனச் சாரதியை மூதூர் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க