உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மீண்டும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் தபால் ஊழியர்கள்

சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்று (21) நள்ளிரவு முதல் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரையில் அனைத்து தபால் ஊழியர்களும் சுகயீன விடுமுறை எடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சித்தக பண்டார தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க