உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலங்கையின் படகுகள் அண்மித்த தீவுகளில் கரையொதுங்கியுள்ளது

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் சுமார் 20 பாரிய படகுகள் மாலைதீவு மற்றும் இந்திய தீவுகளில் கரை ஒதுங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் இதனை தெரிவித்திருக்கின்றது.

இந்த நிலையில்தான் தொடர்ந்து குறித்த துறைமுகங்களுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்திருக்கின்றது.

கடந்த ஒரு வார காலமாக நாட்டில் இடம்பெற்றிருந்த காலநிலை சீர்கேடு காரணமாக பல்வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

கடல் பகுதியிலும் அதிக காற்றுடன் கூடிய காற்று வீசிய காரணமாக பல்வேறு அர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன.

கடல் பகுதியில் அதிக காற்று வீசிய காரணமாக, கடலில் தொழிலுக்காக சென்றிருந்தவர்கள் அருகில் இருக்கும் மீனவ துறைமுகங்களுக்கு செல்லுமாறு மீன்பிடித்துறை அமைச்சு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன் அடிப்படையில் இந்த இலங்கையின் படகுகள் பெரும்பாலன மாலைதீவு இந்திய துறைமுகங்களில் கரையொதுங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க