உள்நாட்டு செய்திகள்

மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது றத்கம ஓவர்கந்த பகுதியில் வைத்து தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 08.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹபுகல, வக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க