உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

பேலியகொட பகுதியில் கடும் வாகன நெரிசல்!

கொழும்பு பேலியகொட சந்தியில் இன்று பிற்பகல் கனரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொழும்பிலிருந்து வந்த கனரக வாகனமொன்று நீர்க்கொழும்பு பாதை பக்கம் திருப்புகையிலேயே மற்றுமொரு கனரக வாகனத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனால் கொழும்பு, கண்டி பிரதான வீதி ஊடாக பயணித்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

சம்பவ இடத்துக்கு போக்குவரத்து காவல்துறையினர் விரைந்து, வாகன நெரிசலை சீர் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க