வெளிநாட்டு செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு !

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தியது.  இந்திய இராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இராணுவத்தினர் மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தினர். இச்சம்பவத்தில் இழப்புகள் எவையும் இடம்பெறாத போதும், இன்று ராஜ்நாத்சிங் காஷ்மீர் புறப்படும் நேரத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதில் அங்கு பதற்றம் நிலவுகிறது.

கருத்து தெரிவிக்க