உள்நாட்டு செய்திகள்புதியவை

நீரின்றி கைதி உண்ணாவிரதம்: அமைச்சர் மனோவிற்கு கோரிக்கை

மகசீன் சிறைச்சாலையில் உள்ள கைதியொருவர் கடந்த 16 ஆம் திகதி முதல் நீரின்றி உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இந்நிலையில்  தங்களது விடயத்தில் தலையிடுமாறு அமைச்சர் மனோ கணேசனிடம் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபனத் தலைவரான 62 வயதுடைய கனகசபை தேவதாசன் என்பவரே இவ்வாறு உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.

நீரும் இன்றி உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் அவரது உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகினறது.

குறித்த நபர் கோட்டை தொடரூந்து நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஆயுள் தண்டனை மற்றும் 20 வருடங்கள் கடுழீய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த இரு வழக்குகளிலும் இவரே வாதாடியிருந்த நிலையில் தனது வழக்கில் சாட்சியங்களை முன்வைக்க பிணை வழங்குமாறு எழுத்து மூல கோரிக்கை முவைத்திருந்தார்.

அதற்கு பதில் கிடைக்காத நிலையில் அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த கைதியை வைத்தியர் மட்டுமே பார்வையிடுவதாகவும் அரசியல் கைதிகளின் விடயத்தில் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தலையிட வேண்டும் எனவும் கைதிகள் கோரியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க