உள்நாட்டு செய்திகள்புதியவை

வேன் சாரதியை தாக்கிய சம்பவம்:மேலுமொருவர் சரண்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கலகெடிஹேன பகுதியில் சென்ற வேனின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலுமொருவர் சரணைந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சரணடைந்த சந்தேகநபர் 26 வயதான களுத்துறையில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வேன் சாரதியை தாக்கிய சம்பவம் :இருவர் கைது

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கலகெடிஹேன பகுதியில் சென்ற வேனின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் இருவர் சரணைந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 16 ம் திகதி கலகெடிஹேன பகுதியில் வாகனத்தை முந்திய பின்னர் ஒரு டிஃபென்டர் மற்றும் பிராடோ ஜீப்பில் பயணித்த சந்தேக நபர்கள் வேன் சாரதியை தாக்கியதாக தெரிவித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இது தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப் பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டது.

சி.ஏ.ஜி 0550 என்ற இலக்கத் தகடை கொண்ட வாகனத்தில் வந்தவர்களும் , சி.ஏ.டீ 8850 என்ற இலக்கத் தகடை கொண்ட டிபெண்டர் வண்டியில் பயணித்தவர்களும் தாக்குதல் மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டது.

குறித்த வாகனங்கள் நேற்று இரவு மகரகமயில் உள்ள ஒரு வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.

இதற்கிடையில், WP CAG 0550 இலக்கத் தகடை கொண்ட பிராடோ ஜீப்பின் உரிமையாளர் நுவான் அமரதுங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் இங்கிரிய கல்லெகொடவில் வசிப்பவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க