உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மலையகத்தின் சில நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

மத்திய மலைநாட்டில் ஒரு சில பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடுமையான மழை காரணமாக நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

நீரோடைகள், ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக இன்று நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டது.

அந்தவகையில் விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேலாக நீர் வெளியாகுவதோடு, மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டிருந்தது.

அத்தோடு காசல்ரீ நீர்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும்படி அதிகாரிகளினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க