உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் இருவர் கைது: துப்பாக்கி, கஞ்சா மீட்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட ஒதியமலைப்பகுதியில் விசேட அதிரடிப்பபடையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இச்சம்பவம் நேற்று (19.07.19) இடம்பெற்றுள்ளது.

ஒதியமலைப்பகுதியில் வசித்துவரும் குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுப்பகுதியில் பை ஒன்றினுள் 581 ஏ.கே.துப்பாக்கி ரவைகளை மீட்ட சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த வீட்டின் உரிமையாளரை கைதுசெய்துள்ளார்கள்.

இதேவேளை அதே பகுதியில் 15 கிராம் கஞ்சாவுடன் ஒருவரையம் கைதுசெய்துள்ளார்கள்.

இவர்கள் இருவரையும் ஒட்டுசுட்டான் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளார்கள்.

கைதான இருவரையும் மற்றும் மீட்கப்பட்ட துப்பாக்கிரவைகள், கஞ்சாவினையும் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

கருத்து தெரிவிக்க