உள்நாட்டு செய்திகள்புதியவை

சிலாபம் கடற்கரை பகுதியிலிருந்து 52 குடும்பங்கள் வெளியேற்றம்

உள்ள சிலாபம் குருசுபடுவ கடற்கைரைப்பகுதியில் நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக அப்பகுதியில் இருந்து 52 குடும்பங்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம் வெல்ல பகுதியில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் குறித்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக, சிலாபம் குருசுபடுவ கடற்கைரைப்பகுதியில் உள்ள பல வீடுகள் இப்பகுதியில் பேரலைகளினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அலைகளை தடுக்க மணல் பைகளைப் பயன்படுத்தி ஒரு தடுப்பு ஒன்றை உருவாக்க அப்பகுதி வாழ் மக்கள் முயற்சித்த போதும் அது சாத்தியப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.

கருத்து தெரிவிக்க