உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘5G அலைவரிசைக் கோபுர திட்டம் கைவிடப்பட வேண்டும்’

யாழ்ப்பாணத்தில் 5G அலைவரிசைக் கோபுரம் அமைக்கும் முயற்சியை கைவிடுமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

அத்துடன் குறித்த திட்டத்துக்கு பதிலாக யாழ் மாநகரத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாநகர பகுதியில் 5G அலைவரிசைக் கோபுரத்துக்கான ஒலிக்கற்றைக் கம்பங்களை நாட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .

இந்நிலையில் எதிர்ப்பை பொருட்படுத்தாத யாழ் மாநகர முதல்வர் இதனை நடைமுறைப்படுத்த முனைகின்றார். இவ்வாறான நடவடிக்கையை அவர் கைவிட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 5G அலைவரிசைக் கோபுரம் அமைக்கும் பொருட்டு அடிப்படையில் ‘ஸ்மார்ட்போல்’ கம்பங்கள் அமைக்கும் செய்ரட்பாடுகள் யாழ் மாநகரத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க