உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ கலந்துரையாடல் இன்று

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சவத்தை முன்னிட்டு முன்னாயத்த திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான 2 வது விசேட கலந்துரையாடல் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் இன்று (19) யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது

இதில் வருடாந்த மஹோட்சவத்திற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஏற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், ஆலயத்தினதும் – வருகை தருகின்ற பக்தர்களினதும் பாதுகாப்பு தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இக் கலந்துரையாடலில் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், யாழ் மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், பிரதம கணக்காளர், யாழ் மாநகர உத்தியோகத்தர்கள், நல்லூர் பிரதேச செயலர், பொது சுகாதார பரிசோதகர்கள், சமயத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க