உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மூடப்படுகிறது

பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் இன்று (ஜூலை 19) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து மாணவர்களும் இன்று மாலை 6 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில், பல்கலைக்கழகத்திற்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நிர்வாகத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறுகல் நிலையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை தற்காலிகமாக முகாமைத்துவ பீடம் மூடப்பட உள்ளது என துணைவேந்தர் பேராசிரியர் உபுல் பி. திசானநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க