விளையாட்டு செய்திகள்

காத்தான்குடி உதைபந்தாட்ட சம்பியன் அணிக்கு வரவேற்பு

மாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களை வரவேற்கும் வைபவம் குறித்த பாடசாலையில் நடைபெற்றது.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மத்திய வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.எஸ் உமர்மௌலானா காத்தான்குடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.எம்.ஹக்கீம் உட்படபலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் காத்தான்குடி குட்வின் சந்தியிலிருந்து மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் அதிதிகளும் வரவேற்கப்பட்டனர்.

கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலை அணி வெற்றி பெற்று கிழக்கு மாகாண சம்பியன் அணியாக (2019) தெரிவு செய்யப்பட்டுள்ளது.

18வயதுக்குற்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டி திருகோணமலையில் இடம் பெற்றது. இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி திங்கட்கிழமை(15) நடைபெற்றது.

கருத்து தெரிவிக்க