உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மஸ்கெலியா- நோட்டன்பிரிட்ஜ் வீதியில் போக்குவரத்து பாதிப்பு

மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் லக்கம் பிரதேசத்தில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் இன்று 19.07.2019 மதியம் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சுமார் 3 மணித்தியாலயத்திற்கு மேல் தடைப்பட்டிருந்தது. இந்த பிரதேசத்தில் நிலவும் கடும் காற்றுடன் கூடிய மழையால் இவ்வாறு மரம் முறிந்து விழுந்துள்ளது.

இந்த மரத்தினை மவுஸ்ஸாகலை இராணுவ முகாமின் இராணுவத்தினர், மஸ்கெலியா காவல்துறையினர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து மிக சிரமத்திற்கு மத்தியில் அகற்றியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க