உள்நாட்டு செய்திகள்புதியவை

தொழில்சார் மேற்பார்வைக் குழு அமர்வு: ஊடகங்களுக்கு அனுமதி

நாடாளுமன்றத்தில் இடம்பெறும் தொழில்சார் மேற்பார்வைக் குழு அமர்வுகளின் போது ஊடகங்களை அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஷு மாரசிங்க தெரிவித்தார்.

கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான தொழில்சார் மேற்பார்வைக் குழுவின் தலைவரான இவர் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

“நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல் மிகவும் முக்கியமானது” என்றுகூறிய பேராசிரியர் மாரசிங்க, கல்வி, உயர் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தொழிற்பயிற்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுக்களை குறித்த குழு மேற்பார்வையிட முடியும் என சுட்டிக்காட்டினார்.

குறித்த குழுவினால் அமைச்சர்களையும் கூட விசாரணைக்காக வரவழைக்க முடியும். எனவே, இதன் அதிகாரங்களை பொதுமக்கள் புரிந்துகொள்வது முக்கியம், என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க