உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பட்டதாரி ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது

உடு­வே­ரிய பிர­தே­சத்தில் பட்­ட­தாரி ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக நிக்க­வரெரட்­டிய பொலிஸார் தெரி­வித்­தனர்.

கைது செய்­யப்­பட்ட நபர் இரா­ணு­வத்தில் பணி­யாற்­றி­விட்டு வில­கிய அதி­காரி ஒருவர் என்றும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

சந்­தேகநபர் தனது உள்­ளா­டைக்குள் ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து வைத்துக் கொண்டு வீதியில் நின்­றி­ருந்த போதே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்­நபர் குரு­நாகல் பிர­தே­சத்தைச் சேர்ந்த 27 வய­து­டை­யவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

காதலில் தோல்வியடைந்த துயரில் போதைப் பொருள் பாவ­னைக்கு அடி­மை­யா­ன­தா­கவும், பின்னர் போதைப் பொருள் பாவ­னைக்கு பணம் இல்­லாத கார­ணத்­தினால் ஹெரோயின் விற்­ப­னையில் ஈடு­பட்­ட­தா­கவும் அவ­ரிடம் மேற்­கொண்­ட­ விசா­ர­ணை­களின் போது தெரி­ய­வந்­த­தாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க