உள்நாட்டு செய்திகள்புதியவை

‘சகுர’யானை விவகாரம்: குற்றப்பத்திரம் தாக்கல்

யானை குட்டி ஒன்றை சட்டவிரோதமாக வைத்துள்ள வழக்கு தொடர்பாக இடைக்கால நீதவான் உட்பட நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் இன்று (ஜூலை 19) குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் கொழும்பு உயர்நீதிமன்றத்தில்  பொது சொத்துச் சட்டத்தின் 25 வது பிரிவின் படி தாக்கல் செய்யப்பட்டன.

இடைநீக்கம் செய்யப்பட்ட நீதவான் திலின கமகே, வனவிலங்கு துறையின் முன்னாள் உதவி பணிப்பாளர் உபாலி பத்மசிறி,மற்றொரு ஊழியரான பிரியங்க சஞ்சீவானி , மற்றும் யானையின் அசல் உரிமையாளர் எனக் கூறப்படும் சந்திரசேன பண்டார ஆகியோர் இந்த வழக்கில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சட்ட அனுமதி இன்றி ‘சகுர’ என்ற யானையை வைத்திருப்பதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க