உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் கூடுவதற்கு தீர்மானித்துள்ளது.

குறித்த அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் கலந்துறையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பிலும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துறையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ருபா மேலதிக கொடுப்பனவு தொடர்பான அமைச்சரவை உபகுழு அறிக்கை இன்று முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க