உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்” செயட்திட்டம் – கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பம்!

நாட்டிற்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய வேலைத்திட்டத்தின் ஆறாம் கட்டம் கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

குறித்த நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த வேலைத்திட்டம் பத்து துறைகளின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது.

இறுதி நாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 5ஆம் திகதி திவுலபிட்டியில் இடம்பெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க