உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

பலாலி விமான நிலையத்திலிருந்து நான்கு நகரங்களுக்கு நேரடி விமான சேவை

யாழ்ப்பாணம் பலாலி விமானநிலையத்தில் இருந்து பெங்களூரு, கொச்சி, மும்பை, ஐதராபாத் போன்ற இந்திய நகரங்களுக்கு நேரடி விமான சேவையை தொடங்க உள்ளதாக சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜூன ரத்னதுங்க தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக இந்தியா 300 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி விமானங்கள் இல்லாத காரணத்தினால் நீண்ட நேரம் பயணித்து கொழும்பு வழியாக வெளிநாடுகளுக்கு செல்லவேண்டியுள்ளது.

இந்நிலையிலேயே, யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இந்திய நகரங்களுக்கு விமான சேவையை விரைவில் தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க