உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இரண்டு தனியார் தொலைக்காட்சிகள் மீது நட்ட ஈடு கோரும் நிதி அமைச்சர்

பௌத்த தேரரான தினியாவல பாலித தேரர், தம் மீது சுமத்திய குற்றச்சாட்டை ஒளிபரப்பியதன் தொடர்பாக இரண்டு தனியார் தொலைக்காட்சிகள் மீது தலா ஆயிரம் மில்லியன் ரூபா நட்டஈடு கோரவிருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார்.

இந்த இரண்டு தனியார் தொலைக்காட்சிகளும் தமக்கு எதிராக பௌத்த பிக்கு வெளியிட்ட கருத்தை மிகவும் மாறுபட்ட விதத்தில் காட்டி அதனை ஒளிபரப்பியதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.

எனவே இதன் மூலம் தமக்கு முழுமையாக அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்தில் தமக்கு எதிரான அரசியல் சேறு பூசும் நடவடிக்கை ஒரு அங்கமாகவே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது எனவே அந்த குற்றச்சாட்டை பிரச்சாரப்படுத்தி அதனை ஒளிபரப்பியதன் தொடர்பில் குறித்த தொலைக்காட்சிகள் மீது தாம் வலக்கை தாக்கல் செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க