உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்முக்கிய செய்திகள்

சகோதரிகளின் மரணம் டொரிங்டன் தோட்டத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது! படம் இணைப்பு

அக்கர்ப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் 18.07.2019 நேற்று மாலை டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 12 வயதுடைய இரண்டு மாணவிகளான சகோதரிகள் பாடசாலை விட்டு வீடு திரும்புகையில் அங்கு நீரோடையை கடக்க முயன்ற போது அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரு மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், நீரினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மற்றொரு மாணவியின் சடலம் இன்று காலை 9.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியை தேடும் நடவடிக்கையில் அக்கரப்பத்தனை பொலிஸார், அதிரடி படையினர் மற்றும் பொது மக்கள் இன்று காலை முதல் ஈடுப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த மாணவியின் சடலம் கொத்மலை நீர்தேகத்திற்கு நீரேந்தி செல்லும் டொரிங்கடன் தோட்ட கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 300 அடி தூரத்திலேயே குறித்த மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இம்மாணவிகள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் எனவும், உயிரிழந்தவர்களான மதியழகன் லக்ஷ்மி என்ற மாணவியின் சடலம் 18.07.2019 நேற்று மாலை மீட்கப்பட்டு, அக்கர்ப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மற்றொரு மாணவியான மதியழகன் சங்கிதா 19.07.2019 இன்று காலை மீட்கப்பட்டு அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த இரு மாணவிகளின் சடலத்தையும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

(நிருபர் க.கிஷாந்தன்)

கருத்து தெரிவிக்க