உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

அரசாங்கதுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து பாணின் விலையில் மாற்றம்

[ prima ]ப்ரிமா நிறுவனம் கோதுமை மாவிற்கான விலை அண்மையில் 8 ரூபாவினால் அதிகரித்தது.

அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து அந்த விலை உயர்வை இடைநிறுத்துவதற்கு முடிவெடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்திருக்கின்றார்.

[Serendib Flour Mills ] செரெண்டிப் ஃப்ளோர் மில்ஸ் என்ற ப்ரிமா சிலோன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டிருந்தது.

இதனை அடுத்து, குறித்த விலை உயர்வை இடை நிறுத்துவதற்கான அறிவிப்பை விடுத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்

இதேவேளை ஏற்கனவே பாணின் விலை 5 ரூபாய் கூட்டுவதாக வெளியிட்டிருந்த கருத்தை நேற்று வெதுப்பக உரிமையாளர் சங்கம் திரும்ப பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க