உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மாத்தளை மாவட்டத்தில் இரு எழுச்சி கிராமங்கள் இன்று திறந்து வைப்பு

கிராம எழுச்சி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மாத்தளை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட இரு வீடமைப்புக் கிராமங்கள் இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.

குறித்த கிராமங்கள் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

வில்கமுவ நமினிகமவில் அமைக்கப்பட்ட 218 ஆவது மாதிரிக் கிராமமான மகாராவணாகம வீடமைப்புக் கிராமம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

21 வீடுகளைக் கொண்ட இக்கிராமத்திற்கு மின்சாரம், வீதி மற்றும் குடிநீர் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க