உள்நாட்டு செய்திகள்புதியவை

தடை செய்யப்பட்ட மீன்வலை பயன்படுத்திய 8 பேர் கைது

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 8 பேர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை உப்பாறு பிரதேசத்தில் கடற்கரை படையினர் மேற்கொண்ட விசேட சோதனைகளின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

அத்தோடு சட்டவிரோத மீன் மீன் பிடிக்கு பயன்படுத்தப்பட்ட படகுகள் ,தடை செய்யப்பட்ட மீன் வலைகள் மற்றும் 15 கிலோ கிராம் மீன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பொருட்கள் திருகோணமலை கடல்வள பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க