உள்நாட்டு செய்திகள்புதியவை

ஐ. நாவின் விசேட அறிக்கையாளர் இன்று இலங்கை வருகிறார்

அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் க்ளெமென்ட் நைலெட்சோசி இலங்கைக்கு இன்று வருகை தரவுள்ளார்.

இவர்  இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி இருப்பார் என குறிப்பிடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த ஒன்பது நாள் விஜயத்தின் போது அவர் , நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் கொழும்பு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த விஜயத்தின் போது  இலங்கை அரச தரப்பு, நீதித்துறை, ஊடகங்கள், பொது அமைப்புகள் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் அதிகாரிகளையும் அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க