உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

டிஜிட்டல் தொழில்நுட்ப கருவிகள் வழங்கி வைப்பு

மலையக பாடசாலைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக இன்று (18.07.2019 ) நுவரெலியா மற்றும் அட்டன் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளுக்கான டிஜிட்டல் தொழில்நுட்ப கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

டிஜிட்டல் உபகரணங்களை மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.ராஜாராம்  வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நுவரெலியா வலயக் கல்விப் பணிமனையின் மேலதிக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.மோகன்ராஜ், மலையக ஆசிரியர் முன்னணியின் செயலாளர் ரவீந்திரன் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்களும்  கலந்து கொண்டனர்.

விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் குறித்த கருவிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

கருவி ஒன்றின் பெறுமதி தலா 45 ஆயிரம் ரூபா என குறிப்பிடப்படுகிறது.

கருத்து தெரிவிக்க