உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

டெங்கு நோயினால் 58 பேர் உயிரிழப்பு

இவ்வருடத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் டெங்கு நோயினால் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்காலப் பகுதியில் 28 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஒப்பீட்டளவில் கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு தீவிரம் அடைந்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்து தெரிவிக்க