உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா சைவப்பிரகாசாவில் பார்வையாளர் கூடம் திறந்து வைப்பு

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் மைதானத்தில் பார்வையாளர் கூடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

வன்னி பாரளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகனின் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இப் பார்வையாளர் கூடத்தின் திறப்பு விழா பாடசாலையின் அதிபர் பா. கமலேஸ்வரியின் தலைமையில் இடம்பெற்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ச.சிவமோகனால் திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் அதிபர் கனகரத்தினம் அவர்களது பெயர் சூட்டப்பட்ட இப் பார்வையாளர் கூடத்தின் திறப்பு விழாவில் பாடசாலையின் ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க