உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

மின் உற்பத்திக்கான நீர்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்து வருவதினால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நீர்தேக்கங்களில் நீர் மட்டம் 21.3 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

இருப்பினும் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதற்காக அமைச்சு அர்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளரும் ஊடக பேச்சாளருமான சுலக்ஷன ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க