உள்நாட்டு செய்திகள்புதியவை

‘அரசியலமைப்பு மீளமைப்பு தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்’

அரசியலமைப்பு மீளமைப்பு தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது.

இதன் அடிப்படையில் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இது தொடர்பான விவாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இது தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு மீளமைப்பு தொடர்பான குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்குகின்றார்.

கடந்த ஜனவரி 11ம் திகதி குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவெடுக்க பட்டிருந்த போதிலும் அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 25 26 ஆம் திகதிகளில் அது சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க