உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த ஒருவர் கைது

மன்னார் மீன்வள உதவி இயக்குனரின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த கடற்படையினர், சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த ஒருவரை நேற்று கைது செய்துள்ளனர்.

கடற்படையினர் நேற்றைய தினம் குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 31 வயதான சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது சந்தேக நபரிடம் இருந்து 3 ஆயிரத்து 212 சங்குகள் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் உதவி கடற்தொழில் பணிப்பாளர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க