உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

மஹிந்த – ரவி இரகசிய சந்திப்பு?

ஐக்கிய தேசியக் கட்சியின் உப  தலைவரான அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் தான் இரகசிய சந்திப்பு எதையும் நடத்தவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும்,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான இரகசிய சந்திப்பொன்று தங்காலையிலுள்ள ராஜபக்ச இல்லத்தில் இடம்பெற்றுள்ளது என சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

ஐ.தே.கவின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச ஜனாதிபதி  வேட்பாளராக  களமிறங்குகவதற்கு ரவி கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகிறார்.  அத்துடன், நிதி அமைச்சர்  மங்களவையும் கடுமையாக விமர்சித்துவருகின்றார்.

இவ்வாறானதொரு  பின்புலத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது எனவும் குறித்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

எனினும்,  ரவியுடன் தான் சந்திப்பு நடத்தவில்லை என்றும், நடத்தியவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடமுடியாது என்றும் மஹிந்த ராஜபகச குறிப்பிட்டுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க