உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மன்னிப்புக் கோரவில்லையானால் தண்டனை வழங்க வேண்டும்

மகா சங்கத்தினரை அகௌரவப்படுத்தும் வகையில் அறிவிப்புச் செய்தவர்கள் மன்னிப்புக் கோரவில்லையாயின் அவருக்கு தண்டனை வழங்குவது நாட்டின் தலைவர்களது பொறுப்பாகும் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அண்மைய காலத்தில் அதிகமான அச்சுறுத்தல்களுக்கு மகா சங்கத்தினர் உள்ளாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலி, போத்தல பிரதேசத்திலுள்ள விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.

மகாநாயக்க தேரர்களையும், பௌத்த துறவிகளையும் அவமதிக்கும் வகையில் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஞன் ராமநாயக்க கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க