உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இன்னுயிர் ஈந்தோர் நினைவேந்தல் நாள்

ஈழ விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை மண்ணின் விடுதலைக்காக கொடுத்த ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்) தோழர்களை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் [21.07.2019] ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது.

குறித்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 04 மணிக்கு கண்டி வீதி கனகராயன் குளம் வவுனியாவில் அமைந்துள்ள இன்னுயிர் ஈந்தோர் நினைவுப் பூங்காவில் நடைபெறவுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் விடுதலை அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், இன்னுயிர் ஈந்தோர் குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இந்நிகழ்வில் அனைத்து போராட்டத் தலைவர்களுக்கும் மாவீரப் போராளிகளுக்கும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்படும் அதனைத் தொடர்ந்து வீரவணக்க கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க