உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ருக்மணி தேவியின் நினைவு தினம்

மறைந்த கலைஞர் ருக்மணி தேவியின் நினைவு தினவைபவம் நேற்று கண்டி ரொச்டேல் மண்டபத்தில் இடம் பெற்றது.

மலையக கலை கலாசார சங்கம் (இரத்தினதீபம் அமைப்பு) குறித்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்துள்ளனர்.

இவ்வைபவத்தில் சிங்கள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ரிச்சர்ட் ஜயகொடி, திரைப்படத் தயாரிப்பாளர் பத்மசிரி கொடிக்கார, மத்திய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு அங்கத்தவருமான சட்டத்தரணி ஏ.எம்.வைஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

ருக்மணி தேவியின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பல்வேறு உள்ளூர் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

(வத்துகாமம் நிருபர்)

கருத்து தெரிவிக்க