உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘மொட்டப்பனையும் முகமாலைக் காத்தும்’ – நூல் அறிமுகம்

ஈழத்தின் பிரபல எழுத்தாளர் சர்மிலா வினோதினியின் படைப்பான ‘மொட்டப்பனையும் முகமாலைக் காத்தும’; என்கின்ற சிறுகதைத்தொகுப்பு நூலுக்கான அறிமுக நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

தமிழ் நாடு பூவரசி பதிப்பகத்தினூடாக கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கான அறிமுக நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வு நிலை உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய க.வி. விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு நூலை வெளியீடு செய்து வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நூல் குறித்து உரையாடுவதற்காக வவுனியா தேசிய கல்வியற் கல்லாரியின் நிதி நிர்வாக உப பீடாதிபதி பொ. சத்தியநாதன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் ஒய்வு நிலை கல்வியலாளர் க.தர்மராசா மற்றும் ஓய்வு நிலை அதிபர் மணலாறு விஜயன் உற்பட விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

[ மன்னார் நிருபர் ]

கருத்து தெரிவிக்க