உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘வடமராட்சி களப்பு’ திட்டம்: அமைச்சர் மனோ, ஆளுநர் விஜயம்

யாழ் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக முன்மொழியப்பட்டுள்ள வடமராட்சி களப்பு செயற்திட்டம் தொடர்பில் ஆராய அமைச்சர் மனோ கணேசனும், ஆளுநர் சுரேன் ராகவனும் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

‘வடமராட்சி களப்பு’ நன்னீர் திட்டத்தினை ஆரம்பிக்க தனது தேசிய ஒருமைப்பாடு,  அரசகரும மொழிகள், அமைச்சினூடாக நிதியுதவியினை வழங்குவதற்கு அமைச்சர் மனோ கணேசன் முன்வந்துள்ளார்.

இந்நிலையில்  செயற்திட்டம் தொடர்பாக அமைச்சருக்கு தெளிவுபடுத்துவற்கும் செயற்திட்ட பகுதியினை நேரடியாக கண்காணிக்கும் நோக்கிலும் அமைச்சர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன் போது இந்த திட்டத்துடன் தொடர்புடைய பொறியியலாளர்கள் மூலம் விரிவாக தெளிவுப்படுத்தபட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆளுநரின் செயலாளர், யாழ் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கருத்து தெரிவிக்க