உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

கூட்டமைப்பு ஐ.தே.கவின் அடிமைகள்: சாடும் அங்கஜன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை போட்டு வலதுபக்கம் திருப்புவது போன்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சாடுகின்றார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை இல்லாத ஆதரவினையே வழங்கி வருகின்றது.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் அடிமைகள். அவர்கள் தொடர்ந்தும் நிபந்தனையற்ற ஆதரவினையே வழங்குகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை போட்டு வலதுபக்கம் திருப்புவது போன்றது. ஆரம்பத்தில் அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என பல்வேறு கருத்துக்களை கூறியவர்கள், நாடாளுமன்றில் எவ்வித நிபந்தனையும்  ஆதரவு வழங்கியுள்ளனர்.

காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை என எமது அபிலாலைகளை விட்டுவிட்டு காணக்காளர் நியமனத்தில் நிற்கின்றனர்.  எமது அபிலாசைகள் இல்லாது போய்விட்டது.

இப்போது இஸ்லாமிய மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு ரணில் விக்கரமசிங்க அந்த நியமனம் உங்களிற்குதான என வாக்குறுதி அளித்துள்ளார்.

இவ்வாறுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் நலன் சார்ந்து செயற்படாது தமது நன்மைகளிற்கானவும், தமது நலன்களிற்காகவும் செயற்படுவதாக’ அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க