உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் இறுதி கிரியைகள்

ஏப்ரல் 21 மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் நல்லடக்கம் பெரும் சோகத்துக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கூழாவடி 8ம் குறுக்கை சேர்ந்த 22 வயதான பல்கலைக்கழ மாணவியான கருணாகரன் உமாசங்கரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று அவரது இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று ஊறணி பொது மைதானத்தில் இறை வழிபாட்டுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது சீயோன் தேவாலய போதகர்கள், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவான மக்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இவரின் உயிரிழப்பையடுத்து, மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க