உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா மக்களை சந்தித்தார் அமைச்சர் மனோ

அமைச்சர் மனோகணேசன் இன்று வவுனியாவில் உள்ள பல கிராமங்களுக்குச் சென்று மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டார்.

தமது அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியினை மக்களின் தேவைகளை அறிந்து பகிர்ந்தளிக்கும் நோக்கில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த விஜயத்தின்போது வவுனியா சிவபுரம் , கற்பகபுரம், புதிய கற்பகபுரம், பம்பைமடு, மடுக்குளம், கோவில் மோட்டை, ஆச்சிபுரம், ஆனந்தபுரம், தரணிக்குளம், சிதம்பரபுரம், கற்பகபுரம், மதுராநகர், ரம்பாவெட்டி , புதிய வேலவர் சின்னகுளம் ஆகிய கிராமங்களுக்கு சென்று சந்திப்புக்களை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், தேசிய அமைப்பு செயலாளர் வினாயகமூர்த்தி ஜனகன், வட மாகாண அமைப்பாளர் ஆகிய நான், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளர் பரனிதரன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் நடராஜா, மன்னார் மாவட்ட அமைப்பாளர்கள் தீபன், ஆகியோரும் கலந்து கொண்டனர்

கருத்து தெரிவிக்க