உள்நாட்டு செய்திகள்புதியவை

‘போதையில் வாகனம் செலுத்திய 2,540 சாரதிகள் கைது’

போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்தான விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று காலை 6.00மணியிலிருந்து இன்று காலை 6.00 மணி வரையான காலப்பகுதிக்குள் 260 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டம் கடந்த 05 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த 05 ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய 2,540சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க