உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

திருகோணமலையில் விபத்து:7 வயது சிறுவன் உயிரிழப்பு

திருகோணமலை, குச்சவெளி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை புல்மோட்டை வீதியில் குச்சவெளி நகரில் நேற்று (12) பகல் மோட்டார் சைக்கிளொன்றும், டிரக்டர் வண்டியொன்றும் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரும், 07வயது சிறுவனும் 03வயது சிறுமியும் காயமடைந்துள்ளனர்.

குறித்த மூவரும் குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதில் மொஹமட் றினோஸ் நிஸ்ரி சரீப் எனும் 07வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக டிரக்டர் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க