உள்நாட்டு செய்திகள்புதியவை

‘போதைப்பொருள் கடத்திய ஈரானியர்கள் நீதிமன்றில் முன்னிலை’

காலி தெற்கு கடற்பரப்பில் போதைப் பொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட படகில் இருந்த 9 வெளிநாட்டவர்களும் கொழும்புபிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின் பின்னர் குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

காலி தெற்கு கடற்பரப்பில்  கொடி மற்றும் உரிய அடையாளங்கள் இன்றி பயணித்த மீன்பிடி படகு , இலங்கை கடற்படையால் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டது.

குறித்த படகு நேற்று மாலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

09 வெளிநாட்டினருடன் வந்த குறித்த படகில் போதைப்பொருள் என்று சந்தேகிக்கப்படும் சுமார் 60 கிலோ பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட்டதாக முன்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த படகில் பயணித்தவர்கள் ஈரானியர்கள் எனவும் ஹெரோயின் அபின் உள்ளிட்ட போதைப்பொருட்களை குறித்த நபர்கள் வைத்திருந்ததாகவும் முதல்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

கருத்து தெரிவிக்க